பட்டு வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் அப்துல் பாரூக் கூறுகையில், கோவை பட்டுக்கூடு அங்காடியில் 2022 ஏப்ரல் முதல் 2023 மார்ச் வரை 240 டன் பட்டுக்கூடு விற்பனை செய்யப்பட்டு ள்ளது.இதன் வாயிலாக அரசுக்கு ரூ.19 லட்சத்து 84 ஆயிரத்து 970 வருவாய் கிடைத்துள்ளது என்றார். கோடை காலத்தில் மல்பெரித்தோட்டத்தில் தண்ணீர் ஆவியாவதை தடுக்க செடிகளின் இடையே தென்னை நார்கள் கழிவு அல்லது மட்டைகளை கொண்டு மூட வேண்டும் என பட்டு வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் அப்துல் பாரூக் தெரிவித்துள்ளார். மல்பெரி பாதுகாப்பு முறைகள் குறித்து அப்துல் பாரூக் கூறியதாவது:- கோடை காலத்தில் மல்பெரி தோட்ட பரா மரிப்பில் தண்ணீர் மிக முக்கியம். செடிகள் வாடா மலும் மண்ணின் ஈரத்த ன்மை குறையாமலும் இருக்க குளிர்ந்த மாலை நேரம், அதிகாலையில் தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.தோட்டத்தில் தண்ணீர் ஆவியாவதை தடுக்க, செடிகளின் இடை வெளியில் காய்ந்த பயிர் கழிவுகள், தென்னை நார் கழிவுகள் அல்லது மட்டை களைக் கொண்டு மூட வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
கோவை பட்டுக்கூடு அங்காடியில் கடந்த ஒரு ஆண்டில் 240 டன் பட்டுக்கூடு விற்பனை செய்யப்பட்டுள்ளது என்று பட்டு வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் அப்துல் பாரூக் தெரிவித்தார்.கோவை பாலசுந்தரம் ரோட்டில் பட்டு வளர்ச்சி த்துறை சார்பில் செயல் பட்டு வரும் பட்டு விற்பனை அங்காடிக்கு கோவை, திருப்பூர், நீலகிரி, தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட் டங்களிலிருந்து வெண் ப ட்டுக்கூடுகளை விவசா யிகள் மற்றும் பட்டு வளர்ப்போர் விற்பனை க்காக கொண்டு வருகின்ற னர்.பட்டுக்கூடுகளின் தரத்திற்கு ஏற்ப விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. இதனை பதிவு செய்யப்பட்ட வியாபாரிகள் போட்டி, போட்டுக்கொண்டு தினமும் ஏலம் முறையில் வாங்கி செல்வது வழக்கம். 2022 ஏப்ரல் முதல் 2023 மார்ச் வரை குறைந்த பட்ச விலையாக ரூ.550 முதல் அதிகபட்சமாக ரூ. 800 வரை பட்டுக்கூடுகள் விற்ப னை செய்யப்பட்டு ள்ளன. இந்த லாபத்தை பார்த்து அதிகம் பேர் பட்டு வளர்ப்பில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.